
கடலூர்: சிதம்பரத்தில் பேருந்து நிழற்குடை ஒன்றில் அமர்ந்திருந்த பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவியின் கழுத்தில் சீருடை அணிந்த பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரித்து, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் குழந்தை திருமணச் சட்டப்படி வழக்கு பதிந்து தொடர்புடைய மாணவியையும் மாணவனையும் தனித்தனியே அழைத்து போலீஸார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாணவரை போலீஸார் கைது செய்தனர். மாணவி சமூக நலத்துறை இல்லத்துக்கு அனுப்பப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1B5r6Cg
0 Comments