Crime

தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை பாதுகாப்பாக மீட்டு தருமாறு அவரது தாய், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை கடந்தஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்தனர். இதில் இருவரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0vXHMcr

Post a Comment

0 Comments