
ஈரோடு | சிறுமியிடம் தவறாக நடந்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் கோபி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33). கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரைக் கைது செய்தனர். கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில், செந்தில்குமாருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/glDQ9af
0 Comments