
தீபாவளியன்று இரவு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரகு என்ற ரவுடியை, மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த சிலர், மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு அருகே கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
மேட்டூரில், தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (29). பெயின்டிங் வேலை பார்த்து வந்த ரகுநாதனுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சசி (5), கிருத்திகா (2) என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். ரகுநாதன், சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் பணியைச் செய்யும் வெள்ளையன் (எ)மாரி கவுண்டன் (37) என்பவருடன் சேர்ந்து, அவ்வப்போது குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக புகார் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yrOf4dJ
0 Comments