
கிருஷ்ணகிரி: லண்டன் நிறுவனத்திற்கு மருந்து பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் பொருள்களை வாங்கி தந்தால் இரட்டிப்பு லாபம் வழங்குவதாக கூறி, ஓசூர் தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.2.16 கோடி மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலூர் ரோடு பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (51). இவர் ஓசூரில் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழில் முன்னேற்றத்திற்காக, நிறுவனத்தின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளம் மூலம் பல்வேறு செயலிகளில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மோகன்ராஜ் இ-மெயிலுக்கு லண்டன் ஓசோமெடிக்பார்ம் என்கிற மருந்து கம்பெனியில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GQna1qo
0 Comments