
சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் அரவிந்த் சர்மா. இவரது 12 வயது மகன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவன் பள்ளி முடிந்து ஆட்டோவில் வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல,நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, தான் எப்போதும் செல்லும் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிலர், மாணவனைத் தாக்கி வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிக் கடத்தி சென்றுள்ளனர். ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி சிக்னலில்நின்றுள்ளது. அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மாணவன், ஆட்டோவிலிருந்து தப்பி அருகிலிருந்த பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IiGWkac
0 Comments