Crime

திருவள்ளூர்: ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து, 4 வயது சிறுமியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கும், கொலையை மறைத்த அவரது மனைவிக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே அண்ணனூர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த, முன்னாள் ராணுவ வீரரான மீனாட்சிசுந்தரம் (63), சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, அவர், சிறுமியின் சடலத்தை, சிறுமி வீட்டின் கழிப்பறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LCBQlwd

Post a Comment

0 Comments