Crime

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த இளைஞரை 7 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்து, நகையை மீட்டனர். தூத்துக்குடி மகிழ்ச்சி புரம் பகுதியை சேர்ந்த காமராஜ்மனைவி கவிதா (42). இவர் நேற்று முன்தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் டூவிபுரம் பகுதியில் சென்ற போது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 9 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்தபகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி ராஜகோபால் நகரைசேர்ந்த சங்கரலிங்கம் மகன் கண்ணன் (23) என்பவர் கவிதாவிடம் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. போலீஸார் கண்ணனை கைதுசெய்து அவரிடமிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் நகை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oUntLSm

Post a Comment

0 Comments