Crime

சென்னை: மனைவியை தாக்கியதாக புகார்அளிக்கப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், படப்பிடிப்பு தளத்தில் வைத்து சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது செய்யப்பட்டார்.

சின்னத்திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, அர்னவ் புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் அவருடன் நடிக்கும் கதாநாயகிக்கும், அவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ofs7ny6

Post a Comment

0 Comments