
புது டெல்லி: தலைநகர் டெல்லியில் 6 வயது சிறுவனை பலி கொடுத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சம்பவம் டெல்லியில் உள்ள லோதி காலனி பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கொலையாளிகள் இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த சிறுவனை கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றுக்கு அழைத்து சென்று இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அதுவும் அந்த கட்டிடம் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சொந்தமானது என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RzLn3Tc
0 Comments