Crime

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி நியூ டவுன், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் பயாஸ் அகமத்(45). இந்நிலையில், நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பிரியாணி செய்வதற்காக அம்பலூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். பிறகு, இரவு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில், நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி சிகரனபள்ளி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் உடல் ஒன்று மிதப்பதாக அம்பலூர் காவல் துறையினருக்கு நேற்று காலை பொதுமக்கள் தகவல் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gVCndI3

Post a Comment

0 Comments