
கரூர்: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கிரானைட் கல் ஏற்றிச்சென்ற ட்ரெய்லர் லாரி மோதியதில் 2 சக்கர வாகனத்தில் (ஸ்கூட்டர்) சென்ற வழக்கறிஞர், மற்றும் அவரது மாமியார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் இடையப்பட்டியை அடுத்து புங்கம்பாடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவர் மகன் கனகராஜ் (34) வழக்கறிஞர். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூர் ராசிநகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YS6hvs4
0 Comments