Crime

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா. இவர், இரண்டாவதாக கருத்தரித்து இருந்தார்.

பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, சூனாம்பேடு அடுத்த இல்லிடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததாகவும் இதில் ஏதோ சிக்கல் ஏற்பட ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு புஷ்பாவை அனுப்பி வைத்ததாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gNG3CvE

Post a Comment

0 Comments