
முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி ரூ.3.72 கோடி மோசடி செய்த கணவன், மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், ரங்க பாளையத்தைச் சேர்ந்தவர் வி.சிவசேனாபதி. இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி, தாய் பத்மாவதி, குமார் என்கிற குமரவேல் ஆகியோர் இணைந்து சிவா ஈமு பார்ம்ஸ், சிவா அக்ரி பவுல்ட்ரி பார்ம்ஸ், சிவா புரமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தனர். இதில், சிவா ஈமு பார்ம்ஸ் நிறுவனம் திருப்பூர், காங்கயம் சாலையில், ரங்கபாளையத்தில் இயங்கி வந்தது. அதன் கிளைகள், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலைப் பேட்டை, தருமபுரி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்தன. இந்த நிறுவனங்கள் ஏதும் முறையாக பதிவு செய்யப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G3IwzMx
0 Comments