Crime

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புதுமந்து பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ராஜன் (26) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இருவீட்டாரும் பேசி திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் அளித்த புகாரின்பேரில், பிரசன்ன தேவி தலைமையிலான மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், இருவீட்டாரின் பெற்றோரிடம் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qXDHl4y

Post a Comment

0 Comments