
சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் 3,469 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் நன்கு தெரிந்த நபர்களால்தான் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தரவுகள் எச்சரிக்கின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்திய அளவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி சாலை விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 16.2 சதவீதம் அதிகமாகும். இதில், போக்சோ வழக்குகள் 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kuKGHYQ
0 Comments