Crime

போபால்: பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது நர்சரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பேருந்தின் ஓட்டுநர், பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்துள்ளது. இதனை உறுதி செய்த போலீசார் தரப்பு வெளியிட்ட தகவல்: மூன்றரை வயதான அந்த மாணவி பள்ளி முடிந்த பிறகு பேருந்தில் வீடு திரும்பியபோது இந்தக் குற்றம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த மாணவி அந்த மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8U9vBIp

Post a Comment

0 Comments