
நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் தனது இரு குழந்தைகளையும் வீசியெறிந்து கொலை செய்த தந்தைக்கு நாமக்கல் நீதிமன்றம்இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (29). இவருக்கு பாக்கியம் (24) என்ற மனைவி மற்றும் கிரிதாஸ் (8), கவிதர்ஷிணி (6) என ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் முன் கணவரைப் பிரிந்து கொல்லிமலை அரியூர்நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
குழந்தைகள் இருவரும் கொல்லிமலை கவரப்பட்டி அருகே தெம்பளம் ஊராட்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். மேலும், மனைவி பாக்கியத்தையும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கும்படியும் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/siZ0wtK
0 Comments