
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த மந்திரி கட்டுமான நிறுவன இயக்குநர் சுஷில் மந்திரியை பணமோசடி வழக்கில் சிஐடி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
கடந்த 2020ம் ஆண்டு கர்நாடக சிஐடி அதிகாரிகள் பெங்களூருவை சேர்ந்த மந்திரி கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் சுஷில் மந்திரி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதில் சுஷில் மந்திரி கட்டிடங்களை கட்டியது, பெயிண்ட் வாங்கியது, விளம்பரம் வெளியிட்டது ஆகியவற்றின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக‌ பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடக சிஐடி அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை செய்தனர். இதனிடையே அமலாக்கத்துறை இவ்வழக்கை விசாரித்ததில், மந்திரி கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று 10 ஆண்டுகள் கடந்தும் குடியிருப்பை வழங்காதது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) தெளிவான வழிகாட்டுதல் வழங்கிய போதும், வாடிக்கையாளர்களின் தொகை திருப்பித் தரப்பட‌வில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Yz1Z0AM
0 Comments