Crime

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் ஆய்வாளர், காவலரை தாக்கிய வழக்கில் நகர பாஜக தலைவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்துக்கள் குறித்து அவதூறாகபேசியதாக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து நேற்று மாலை இந்துமுன்னணி சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான போஸ்டர்களை சிலர் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்தகிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்சுஜித் ஆனந்த், ‘அனுமதி பெறாமல் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது’ எனக் கூறி போஸ்டர்களை பறிமுதல் செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நகரபாஜக தலைவர் எம்.சீனிவாசன் தலைமையிலான சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து எட்டயபுரம் சாலையில் ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் வாகனத்தை முந்திச் சென்று மறித்தனர். மோட்டார் சைக்கிளில் இடித்து போலீஸ் வாகனம் நின்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qQL4wC0

Post a Comment

0 Comments