Crime

ஓசூர்/கிருஷ்ணகிரி: ஓசூரில் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 2 பேரை கைது செய்தனர். ஓசூர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

ஓசூர் ரயில் நிலையம் அருகே அருண்குமார் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.7,70,000 டிபாசிட் செய்தால் இணையதள முகவரி வழங்கப்படும். அதில் உங்கள் டிபாசிட் தொகைக்கு பாயின்ட் காயின் அதிகரிக்கும். அதன்படி வாரம் வாரம் ரூ.93 ஆயிரம் உங்களுக்கு வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GuLpCma

Post a Comment

0 Comments