Crime

சென்னை: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவுடியை போலீஸில் காட்டிக் கொடுத்த இளம் பெண்ணை ரவுடியின் உறவினர்கள் மிரட்டியதால், மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை அண்ணாநகர் அன்னை சத்தியாநகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவருக்குத் திருமணமாகி விஜயகுமார் என்ற கணவரும், 6 மற்றும் 4 வயதில் இரு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பும், இளைய மகன் எல்கேஜியும் படித்து வருகின்றனர்.

கணவர் விஜயகுமார் சரியான வேலை இல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, மகாலட்சுமி அண்ணா நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் துப்புரவு வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரவுடியான ராபர்ட் என்பவர் கடந்த சில மாதங்களாக மகாலட்சுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q3Liof8

Post a Comment

0 Comments