
கரூர் அருகே கல் குவாரிக்கு எதிராகபோராடியவர் வேன் மோதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி நேற்று 2-வது நாளாக சடலத்தைப் பெற மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் குப்பம் அருகேயுள்ள காளிப்பாளையம் வெட்டுக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜெகநாதன்(49). விவசாயி. அப்பகுதியில், உரிமம் காலாவதியான நிலையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த கல் குவாரி குறித்து, ஜெகநாதன் பல்வேறு புகார்களை அளித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WpRnmkg
0 Comments