
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் நீதிபதியை பின்தொடர்வதாக புகார் எழுந்ததையடுத்து, வழக்கறிஞர் ஒருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில், “ஜூலை 25-ம் தேதி காலை 8.45 மணிக்கு நீதிமன்ற அறைக்கு ஒரு வழக்கறிஞர் வந்தார். அவர் பெயர் தெரியாது. மேலும் யமுனா நதிக்கரை நடை பாதையில் வழக்கமான நடை பயிற்சிக்குப் பிறகு அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். அப்போது, செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், நீதிமன்ற அறைக்கு வந்த அதே நபர் எனக்கு அருகே வந்து நின்றார். அவர் ஏதோ சொல்ல முயன்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7hsbMCQ
0 Comments