
அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த ‘ஐஎப்எஸ் நிதி நிறுவனம்’ திருப்பத்தூர் மாவட் டத்திலும் பல இடங்களில் கிளை அலுவலகம் திறந்து ஏஜென்ட் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலித்துள்ளது. புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காது என முகவர்கள் மிரட்டியதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் செய்வதறியாமல் உள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட் பாடியை தலைமையிடமாக கொண்டு ஐஎப்எஸ் நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம் பரம் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RvlM03x
0 Comments