
சென்னை: அண்ணா நகரில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை, அரும்பாக்கம், என்.எஸ்.கே. நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்தீப்குமார் (28). ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மதியம் அண்ணா நகர், இந்திரா நகர், கிருஷ்ணன் கோயில் பின்புறமுள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கும்பல் சந்தீப்குமாரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RX9gz4W
0 Comments