
சென்னை: நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர், தேவி சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே கோயிலில் இருந்து திருடப்பட்ட மேலும் 11 சிலைகள் எங்கு உள்ளன என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா பண்ணத் தெருவில் பழமை வாய்ந்த பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த வெண்கல விநாயகர் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VFr0xMk
0 Comments