
திருவாரூர்: திருவாரூர் அருகே திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, நேற்று முன்தினம் பி.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் 2-ம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றது.
அதில், பாஸ்கர் என்பவரின் பெயரில் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவைச் சேர்ந்த திவாகரன்(29) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வெழுதியது தெரியவந்தது. பிளஸ் 2 முடித்துள்ள அவர், திருவாரூரில் தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xV15q6d
0 Comments