
கோவை வடவள்ளி அருகேயுள்ள பொம்மனாம்பாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பெரியராயப்பன் (76). இவரது மனைவி ராஜம்மாள் (67). கடந்த 12-ம் தேதி வீட்டில் பெரியராயப்பன் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டுக்கு வந்த இளம்பெண்ணும், ஓர் ஆணும், பெரியராயப்பனிடம் குடிநீர் கேட்டனர். பெரியராயப்பன் குடிநீர் எடுக்க உள்ளே சென்றபோது, அவரைத் தாக்கி கட்டிப்போட்டனர். இருவரும் பீரோவில் இருந்த இரண்டே கால் பவுன் நகை, ரூ.1,500 ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, தப்ப முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SKN6TJy
0 Comments