
நாமக்கல்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அரசு பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் (26) பி.காம்., பட்டதாரி. வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்கான முயற்சியில் இருந்து வந்தார். வீட்டில் இருந்த சமயங்களில் சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TpVWb61
0 Comments