Crime

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த நிலமோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், 2 வட்டாட்சியர்கள், சார்பதிவாளர், நில அளவையர் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால், வல்லம் மற்றும் பால்நல்லூர் ஆகிய கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் பங்குதாரர், மேற்கண்ட மனைப் பிரிவுகளின் பொது உபயோகத்துக்கான சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை, கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத்து, அதற்கான பத்திரத்தை ஆணையரிடம் வழங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S3uwhIj

Post a Comment

0 Comments