
உடுமலை ஏரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (26). இந்து முன்னணி வடக்கு நகர செயலாளராக இருந்தார். அதே பகுதியில் தம்பதிகளான பிரவீன் - வளர்மதி, ரஞ்சித்-கவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.
சுய உதவிக்குழு மூலம் கவிதாவுக்கு,வளர்மதி கடன் பெற்றுத்தந்துள்ளார். கடனை கவிதா திருப்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது. இவ்விவகாரத்தில் பிரவீன் தரப்புக்கு ஆதரவாக குமரவேல் இருந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்- கவிதா தம்பதி வாடகை வீட்டை காலி செய்ய முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W1efzJB
0 Comments