
குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த கலெடிபேட்டை யைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அலமேலு. முன்னாள் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று மகள்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் தம்பதியர் மட்டுமே இருந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கடப்பாறையால் மனைவியை தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்டு குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZtzOHxE
0 Comments