Crime

திருப்பூர்: பல்லடம் அருகே காலி நிலத்தில் அலைபேசி டவர் அமைத்து அதற்கு வாடகை தருவதாகக் கூறி, அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி வங்கிக் கணக்கு வாயிலாக பணம் பறித்த நபரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னியக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். ஜவுளித்தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவருடைய அலைபேசி எண்ணுக்கு கடந்த பிப். 24-ம் தேதி 4ஜி மற்றும் 5ஜி அலைபேசி டவர் அமைத்து தருவதாகக் கூறி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதிலிருந்த எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார் கதிர்வேல். அலைபேசி டவர் அமைக்க வேண்டிய இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லி இருக்கிறார் எதிர்முனையில் பேசிய நபர். இதையடுத்து அந்த இடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மாதாமாதம் பல ஆயிரம் வாடகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, கதிர்வேலிடமிருந்து சிறுகச்சிறுக பணம் பறித்துள்ளார் எதிர் முனையில் பேசிய நபர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6XTsnOK

Post a Comment

0 Comments