
சென்னை: தியாகராய நகரில் துப்பாக்கி முனையில் தொழில் அதிபர் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பெண் மருத்துவர் ஒருவரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராய நகர், ராமசாமி தெருவைச் சேர்ந்த தொழில் அதிபர் சரவணன் (46). கடந்த 20-ம் தேதி வீடு புகுந்து, இவர் காரில் கடத்தப்பட்டார்.
இவரை கடத்திய வழக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் (42), கோவையை சேர்ந்த சிறை காவலர் நாகேந்திரன் (31), கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் குரு (23), திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அப்ரோஸ் (23), மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஜய் (24), விஜயபாண்டி (25) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பொம்மை துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4hJlrN5
0 Comments