Crime

புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சண்முகாபுரம் வெள்ளவாரி பாலம் அருகே புதரில் ஒருகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சாதாரண உடையில் அங்கு சென்று அந்த கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரம் அய்யனார் (26), மாணிக்க செட்டியார் நகர்விஸ்வநாதன் (21), திலாசுபேட்டை வீமன் நகர் அகிலன் (எ) பொட்டுக்கடலை (22), முத்தியால்பேட்டை டிவி நகர் சந்துரு (22), திலாசுப்பேட்டை சசி (எ) சசிகுமார் (20), சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு சதீஷ் (20), கோரிமேடு காமராஜர் நகர் ஆனந்தகுமார் (20) ஆகியோர் என்பதும், எதிரிகளை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XJKYLMh

Post a Comment

0 Comments