
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் ஒருவரை போக்ஸோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் புனித அருளானந்தர் தேவாலயம் உள்ளது. இங்கு சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்த ஜான்ராபர்ட் (46) என்பவர் பாதிரியாராக இருந்தார். இவர் தேவாலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/P5vIBJA
0 Comments