Crime

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக நடந்த விசாரணையில் செயற்கை கருத்தரிப்பு பிரிவில் குறைகள் இருப்பது உறுதியான நிலையில், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தும், நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பாக ஓசூரில் உள்ள விஜய் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7-ம் தேதி சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) பரமசிவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விஜய் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.மேலும், மருத்துவமனை நிர்வாகியிடம் நோட்டீஸ் வழங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tafTwgF

Post a Comment

0 Comments