
உதகை: நீலகிரி மாவட்டம் தேனாடுகம்பை அடுத்த அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (43). இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சேரிங்கிராஸ் பகுதியில் அவரை ஒரு சிலர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், டிஎஸ்பி மகேஸ்வரன், ஆய்வாளர் பிலிப் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக உதகையை சேர்ந்த மோசின், ராஜ்குமார், அகிம், இர்சாத் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rjfOAzi
0 Comments