
கோவை: கோவை தடாகம் சாலை பசுவண்ணன் கோயில் இறக்கம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(37), நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கடைக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர், ரமேஷை மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
பொதுமக்கள் அவர்களைப் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகதூர் மகோடா(36), சந்தோஷ் மகோடா(33), பப்லு மகோடா(23), பிஹாரைச் சேர்ந்த மனிஷ் மகோலி(22) ஆகியோர் எனத் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39e7NSJ
0 Comments