
நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச் சேரி ஆகிய மீனவக் கிராமங்களுக்கிடையே வெகு நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது மீனவர்கள் கடலுக்கு சென்றுவரும் நிலையில், இரு கிராமத்தினரிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் பேசி முடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4HQk5iG
0 Comments