
புதுடெல்லி: வியட்நாமில் இருந்து 45 கைத்துப்பாக்கிகளுடன் டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய இந்திய தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் பணியில் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை ஈடுபட்டிருந்தனர். இதில் 2 ட்ராலி பேக்குகளில் 45 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். வியட்நாமில் இருந்து டெல்லி வந்த இந்தியத் தம்பதியர் இவற்றை கடத்தி வந்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.22 லட்சமாகும். இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/swygV09
0 Comments