
சித்தூர்: ஆந்திர மாநிலத்தில், சட்டவிரோதமாக வெளி மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சுமார் 1 லட்சம் மதுபான பாட்டில்களை நேற்று சித்தூர் போலீஸார் ரோட் ரோலர் மூலம் அழித்தனர்.
ஆந்திர மாநில கலால் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து எல்லைகளில் கடந்த ஓராண்டாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சுமார் 1 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை நேற்று சித்தூர் மாவட்ட எஸ்பி ரிஷாந்த் ரெட்டி முன்னிலையில் காணிப்பாக்கம் ஐடிஐ அருகே சாலையில் கொட்டி, ரோட் ரோலர் மூலம் அழித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jURBaym
0 Comments