
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விளாங்குளம் கிராம உதவியாளராக, அதே ஊரைச் சேர்ந்த சின்னையா மகன் பூமிநாதன்(29) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், அப்பகுதியில் உள்ள காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டரில் மணல் அள்ளுவது குறித்து வருவாய்த் துறைக்குத் தகவல் அளித்து, மணல் திருட்டை நடைபெறாமல் தடுத்து வந்தார்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு செப்.9-ம்தேதி இரவு பட்டங்காடு கிராமத்தில் ஒருமுள்புதரில் படுகாயங்களுடன் பூமிநாதன் கிடந்தார். தகவல் அறிந்த சின்னையா அங்குச் சென்று படுகாயத்துடன் கிடந்த தனது மகனை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மறுநாள் (செப்.10) பூமிநாதன் இறந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QWBO2Dm
0 Comments