
அருப்புக்கோட்டை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை செவிலியர் பயிற்சி கல்லூரி தலைவரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அங்கு பயின்ற மாணவ, மாணவிகளை வேறு கல்லூரிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான்கிரேஸ் (38) மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆபாச வீடியோவை அனுப்பியதாகவும் எழுந்த புகாரை அடுத்து,அவரை அருப்புக்கோட்டை மகளிர் போலீஸார் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l4NOrcn
0 Comments