
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ தங்க நகைகளை திருடிய வழக்கில், தொடர்புடையவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி (55). நகை மொத்த வியாபாரியான இவர், தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு நகைகளை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம். அதன்படி, இவர் நேற்று முன்தினம், சென்னையில் இருந்து தங்க நகைகளுடன் தஞ்சாவூர் வந்து பல்வேறு கடைகளுக்கு கொடுத்துவிட்டு, அதற்கான பணத்தையும் பெற்றுக் கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GQE9TU2
0 Comments