
ஈரோடு: ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்திய உயர்மட்டக் குழுவினர், விரைவில் ஓசூரிலும் விசாரணை நடத்த உள்ளனர். சிறுமியை வெளிமாநில மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்று கருமுட்டையை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த தாய் உட்பட 4 பேரை ஈரோடு போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 தனியார் மருத்துவமனைகளில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XinVwdu
0 Comments