Crime

கரூர்: கரூரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவர் மகன் சஞ்சய் (23). இவர் தந்தை ராஜலிங்கம் தாயை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். தாய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலை இல்லாததால் கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்ததாகவும், அதற்கும் சரிவர செல்லாததால் அவரது தாய் அடிக்கடி திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/htn3aLj

Post a Comment

0 Comments