
காரைக்குடி: காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வெள்ளி பொருட்களை டவுசர் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் 10-வது வீதி தெற்கு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (56). இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவ சிகிச்சைக்காக மே 4-ம் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். வீட்டைச் சுற்றிலும் இவர் சிசிடிவி கேமரா பொருத்தி, தனது செல்போனுடன் இணைத்துள்ளார். இதன்மூலம் அவ்வப்போது சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணிப்பது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F0hGnvI
0 Comments