Crime

செங்கல்பட்டு: ஆன்லைன் செல்போன் செயலி மூலம் லஞ்சம் பெற்ற மதுவிலக்கு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி மாலா, வீட்டில் தொடர்ந்து மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fetkudb

Post a Comment

0 Comments